Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி – மகாராஷ்டிராவில் சோகம்

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன ஆலையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 100 பேருக்கும் மேல் பணியாற்றி வந்த அந்த ஆலையில் நண்பகல் வேளையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இரசாயன ஆலை என்பதால் வேகமாக தீ அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments