Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டைம் வேஸ்ட்.. மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குறித்த மனுவுக்கு நீதிபதிகள் கருத்து.. மனு தள்ளுபடி..!

Advertiesment
மகாராஷ்டிரா தேர்தல்

Siva

, வியாழன், 26 ஜூன் 2025 (13:53 IST)
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் தள்ளுபடி செய்தது. 
 
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகும், சுமார் 76 லட்சம் வாக்குகள் பதிவானதாக கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது. 
 
மும்பையை சேர்ந்த சேதன் சந்திரகாந்த் அஹிர் என்பவர் வழக்கறிஞர் பிரகாஷ் அம்பேத்கர் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மாலை 6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடந்த விதம் குறித்து நடைமுறை சிக்கல்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றை இந்த மனு குற்றம் சாட்டியது. 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மாலை 6 மணிக்கு பிந்தைய வாக்குப்பதிவு முடிவுகள் எந்த ஒரு வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் குறிப்பிட்ட வகையில் உதவியதாக ஆதாரம் காட்டப்படவில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.
 
மேலும் நீதிமன்றத்தின் ஒரு நாள் முழுவதையும் இந்த மனுவை கேட்பதில் வீணாக்கப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றாலும், நாங்கள் அதை தவிர்க்கிறோம்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60 வயது பாட்டியை குப்பைமேட்டில் போட்டுவிட்டு சென்ற பேரன்.. சிசிடிவி மூலம் தெரிந்த உண்மை..!