Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் – உயிரோடு மீட்பு !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:32 IST)
மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உயிரோடு மீட்டுள்ளது.

கடந்த மாதம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த திருச்சியை சேர்ந்த சுஜித், ஹரியானாவைச் சேர்ந்த ஷிவானி என்ற இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர். இது இந்தியா முழுவதும் பரவலாக விவாதங்களை எழுப்பி விழிப்புணர்வை உண்டாக்கியது. இருந்தும் இது போல ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது நின்றபாடில்லை.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இப்போது இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments