Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி.. முதல்வர் பதவி பறிபோன கவலையா?

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (16:08 IST)
பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்த நிலையில், திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் பதவி பாஜகவுக்கு சென்று விட்டதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி, அமித்ஷாவின் அன்பு கட்டளைக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், பாஜகவுக்கு முதல்வர் பதவி என அறிவித்த சில நாட்களில், சொந்த கிராமம் சென்ற ஏக்நாத் ஷிண்டே அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஏக்நாத் ஷிண்டேவுக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஒரு சில நாட்களில் முழுமையாக குணமாகிவிடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் ஏற்பட்ட மனக்கவலையால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருந்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments