ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி.. முதல்வர் பதவி பறிபோன கவலையா?

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (16:08 IST)
பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்த நிலையில், திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் பதவி பாஜகவுக்கு சென்று விட்டதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி, அமித்ஷாவின் அன்பு கட்டளைக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், பாஜகவுக்கு முதல்வர் பதவி என அறிவித்த சில நாட்களில், சொந்த கிராமம் சென்ற ஏக்நாத் ஷிண்டே அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஏக்நாத் ஷிண்டேவுக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஒரு சில நாட்களில் முழுமையாக குணமாகிவிடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் ஏற்பட்ட மனக்கவலையால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருந்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments