Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகம்..!

Advertiesment
webdunia

Siva

, வியாழன், 21 நவம்பர் 2024 (07:10 IST)
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் நேற்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று தேர்தல் முடிவடைந்த உடன் ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை எடுத்தன.

அதில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 44 முதல் 53 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 25 முதல் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கருத்துக்கணிப்பின்படி முடிவுகள் வந்தால் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தஞ்சை பல்கலை துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த கவர்னர்.. ஓய்வு பெறுவதற்கு முன் நடவடிக்கை..