Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர்

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர்
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (01:14 IST)
மும்பையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த சனிக்கிழமை மும்பையில் நவ்கர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று சாத்பூர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
 
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்த  மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சகில் இஸ்மாயில் சவுத்திரி என்ற லாரி ஓட்டுநரை கைது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை