Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (00:34 IST)
கேரளாவில் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் தெகன்மலா லிஜோய். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜிஷாமோள் (37). ஜிஷாமோள் மெலட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
 
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அன்னமோள் (11) மற்றும் மாத ஆண் குழந்தை ஆல்பர்ட் (1). நேற்று முன்தினம் காலை ஜிஷாமோளின் வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு கதவை தட்டினார்கள்.
 
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவும் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசுக்கும், ஜிஷாமோளின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
 
பின்னர், ஜிஷாமோள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றதும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துகொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் வழக்கில் ஜெயலலிதா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு