Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (11:29 IST)
மக்களவையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததை எடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 
 
மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்  எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர். 
 
நேற்று பாராளுமன்றம் ஸ்தம்பிக்க வைக்கப்பட்ட நிலையில் 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஒரு எம்பியின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தியதால் மக்களவையின் மையப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments