Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.450 க்கு சமையல் சிலிண்டரை வழங்குவோம் - அமைச்சர் அமித் ஷா

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (17:24 IST)
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த 5 மாநிலங்களுக்கானன வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

எனவே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இன்று இந்தூரில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது   அவர் கூறியதாவது: ''வரும் 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து மாதம் 5 கிலோ ரேசன் பொருட்கள் இலவசமாக அளிப்போம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ரூ.450க்கு வழங்குவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments