Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியம் குடித்தால்தான் உள்ள விடுவோம்! - பாஜக நிர்வாகி அறிவிப்பால் சர்ச்சை!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:40 IST)

நவராத்திரி விழாவிற்கு கோமியம் குடித்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என பாஜக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் பிரபலமான நவராத்திரி விழா நாளை மறுநாள் (அக்டோபர் 3) தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி நாட்களில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ‘கார்பா’ நிகழ்ச்சி புகழ்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கோமியம் குடிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நவராத்திரியை ஒட்டி கார்பா நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தாங்கள் இந்துக்கள்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக கோமியம் குடிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் உண்மையான இந்துக்களை கண்டறிய முடியும் என்றும் இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சிண்டு வர்மா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சொல்லியுள்ளார்.

 

மேலும் உண்மையான இந்துக்கள் இதை மறுக்க மாட்டார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments