லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (16:55 IST)
ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உறவினர் வீடுகளில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி – ராஷ்டிரிய  ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில், ரயில்துறையில் வேலை வாங்கித் தருவதாக  நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று லாலு  இவ்வழக்கு தொடர்பாக டெல்லி,  பீகார் போன்ற இடங்களிலும், லாலுவின் உறவினர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏஅபு டோஜ்னாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments