சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் : தலைமையாசிரியர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (16:30 IST)
அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 
 
கடந்த ஆறாம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகராட்சி உருது பள்ளியில் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளை கொடுத்த நிலையில் போட்டி போட்டுக் கொண்டு சாக்லேட் சாப்பிடுவது போல மாணவர்கள் சத்து மாத்திரையை சாப்பிட்டார்கள். 
 
இதனை அடுத்து நான்கு மாணவர்கள் உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். இதனை அடுத்து கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர், சுகாதாரத் துறை அலுவலர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க முதலமைச்சராக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments