Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்ய மம்தா பானர்ஜி முடிவு..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (08:00 IST)
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று தண்டனை விவரம் வெளியானது. குற்றவாளி சஞ்சய் ராவுக்கு, சாகும்வரை சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்தத் தண்டனை சரியானது அல்ல என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்தநிலையில், "இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்," என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு, மாநில காவல்துறையிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டது. "நாங்கள் விசாரணை செய்திருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை உறுதி செய்திருப்போம்," என அவர் கூறியுள்ளார்.
 
விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை என்றும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மரண தண்டனை வழங்கவேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து இன்னும் சில நாட்களில் மாநில அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்