Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான முதல் நாளே மணமகள், மணமகன் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை..!

Mahendran
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:02 IST)
திருமணமான முதல் நாளே மணமகன், மணமகள் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டதில் மணமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மணமகன் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன் குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இரு தரப்பு பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்ததும் தம்பதியினர் தேநீர் அருந்துவதற்கு உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு நவீன் குமார் மற்றும் லிகிதா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அருகில் இருந்த கத்தியை எடுத்து ஒருவர் வரை ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதாக தெரிகிறது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மணமகள் லகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மணமகன் மட்டும் ரத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் இந்த சம்பவம் காரணமாக மணமகள், மணமகன் தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments