Publish Date: Thu, 11 Oct 2018 (20:09 IST)
Updated Date: Thu, 11 Oct 2018 (20:12 IST)
அரசு விழா ஒன்றில் கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் மவுனமாக தலைகுனிந்து கவர்னர் இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நடந்த ஒரு அரசு விழாவில் முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் 'புதுவை அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது' என்று கவர்னரிடம் ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கவர்னர் கிரண்பேடி கேள்விக்கு பதில் கூறாமல் மெளனமாக இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
webdunia
Publish Date: Thu, 11 Oct 2018 (20:09 IST)
Updated Date: Thu, 11 Oct 2018 (20:12 IST)