இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

Mahendran
சனி, 10 மே 2025 (15:23 IST)
மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் 5 முக்கியமான பயங்கரவாத தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இப்போது, அவர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளன.
 
1. ஹபீஸ் முகமது ஜமீல் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இவர், அதன் தலைவர் மவுலானா மசூத் அசாரின் மைத்துனர். இளைஞர்களை திசைதிருப்பி தீவிரவாதம் நோக்கி செல்ல தூண்டியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
 
2. முகமது யூசுப் அசார் – மசூத் அசாரின் மற்றொரு மைத்துனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய விமானம் IC-814ஐ கடத்திய வழக்கில் தேடப்பட்டவர்.
 
3. முகமது ஹசன் கான் – ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த இவர், காஷ்மீரில் தாக்குதல்களுக்கு சதி திட்டங்களை வகுத்தவர். இவர், அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி முப்தி அஸ்கர் கானின் மகன்.
 
4. காலித் – லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார். இவரது இறுதிச்சடங்கில் பாக் ராணுவ அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.
 
5. அபூ ஜுண்டால் – லஷ்கர் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த இவர், முரிட்கே பகுதியில் மார்க்கஸை நடத்தியவர். இவருக்கும் பாக் ராணுவ ஆதரவு இருந்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments