Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 7 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு! இயல்பு நிலை திரும்பல்!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:10 IST)
கேரளாவில் 7 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புக் கம்மியாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு அம்மாநிலத்தை சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி, பச்சை என 4 மண்டலங்களாக பிரித்தது. இதையடுத்து சிவப்பு மண்டலத்தைத் தவிர மீதமுள்ள மூன்று மண்டலங்களில் உல்ள 7 மாவட்டங்களுக்கு இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் செவ்வாய்,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படும். அவசர சேவையில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments