Publish Date: Wed, 13 May 2020 (13:48 IST)
Updated Date: Wed, 13 May 2020 (13:51 IST)
கேரளாவில் கிட்டதட்ட 50 நாட்களுக்கு பிறகு கள்ளுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கேரளாவில் கடந்த 50 நாட்களாக கள்ளுக்கடைகளும் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. வருவாய் பாதிப்பு காரணமாக கடைகளை திறக்க அரசு நினைத்தாலும் உள்ளூரில் கிளம்பிய எதிர்ப்புகளால் அவை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் கள் இறக்கும் தொழிலாளர்கள் நிலைமை சீரடைய இன்று முதல் கள்ளுக்கடை திறக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
ஒருவருக்கு அதிகபட்சமாக ஒன்னரை லிட்டர் கள் பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.