Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள வெள்ள நிவாரண நிதி - ரூ.1027 கோடியாக உயர்வு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (10:12 IST)
உலகமெங்கிலும் இருந்து கேரளாவிற்கு வந்த நிவாரண நிதி 738 கோடியிலிருந்து 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது  என செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
 
தற்பொழுது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி, மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
நேற்று முன்தினம் கேரளாவில் நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகஸ்ட் 28-ந் தேதி வரை கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக  கூறியிருந்தார். 
இந்நிலையில் அந்த நிவாரண நிதியானது தற்பொழுது வரை 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments