Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு...போலீஸார் விசாரணை

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (18:52 IST)
கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டிருந்த கண்ணூர்- ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டிருந்த கண்ணூர்- ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பொதுப்பெட்டி முழுவதும் சேதமடைந்தது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இதில், தீ பிற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. பயணிகள் யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தேசிய புலனாய்வு படையினரும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments