Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவனந்தபுரத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்: கேரள அரசு உத்தரவு!

Advertiesment
திருவனந்தபுரம்
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (07:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளா முழுவதும் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் மட்டும் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திருவனந்தபுரத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர பொது சமூக மற்றும் கலாச்சார கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்தது
 
அதேபோல் திருவனந்தபுரத்திலுள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தையும் மூடவும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
10, 12ஆம் வகுப்பு இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
 
திருவனந்தபுரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முழு ஊரடங்கும் நீடிக்க அரசு திட்டமிட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலையில் எப்போது மாற்றம்?