Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.
, திங்கள், 20 டிசம்பர் 2021 (08:05 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மக்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை: பெரும் பரபரப்பு!