Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் கேரள அரசு! என்ன செய்கிறது தமிழக அரசு?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (05:46 IST)
சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளதால் அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளில் திருப்தி இல்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள்  கேரள மீனவ பிரதிநிதிகளுடன் கலந்து பேசி தாங்களாகவே ஆழ்கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழக, கேரள மீனவர்கள் நேற்று 26 விசைப்படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடி ஆழ்கடலுக்குள் சென்றுள்ளனர். இந்த 26 விசைப்படகுகளுக்கும் தேவையான டீசல்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கேரள அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments