Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளம் வடியாததால் மணப்பெண்ணை சுமந்து சென்ற மணமகன்: கொச்சியில் சுவாரஸ்யம்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:36 IST)
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை நின்றுவிட்டபோதிலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் அம்மாநில மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில்தான் நடந்து செல்கின்றனர்.
 
இந்த நிலையில் கொச்சியில் ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த ஒரு திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்து காரில் மண்டபத்திற்கு வந்தபோது மண்டபத்தின் எதிரே முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. இதனால் மணப்பெண் காரில் இருந்து இறங்க தயங்கியபடி இருந்தார்.
 
அப்போது மண்டபத்தில் இருந்த மணமகன், சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் இறங்கி மணமகளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவரை நனையாமல் மண்டபத்திற்குள் தூக்கி சென்றார். இதுகுறித்து வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக மணமகன் சுமந்து சென்ற காட்சியை திருமணத்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்