Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை பாத்திரம் ஏந்தாதீர்: பினராயி விஜயனை தாக்கி பேசிய காங்கிரஸ்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (19:53 IST)
கடந்த மே 28 ஆம் தேதி துவங்கிய பருவமழை கேரளாவை புரட்டிப் போட்டது, சுமார் 483 பேர் மழை, வெள்ளம், நிலச்சரிவு இயற்கை பேரிடருக்கு பலியாகியுள்ளனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
 
எனவே, கேரள அமைச்சகம் கடந்த வாரம் வெள்ள நிவாரண நிதி திரட்ட வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் செல்ல முடிவெடுத்தது. இதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவையும் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
 
ஆனால், இதனை கடுமையாக விமர்சித்துள்ளது கேரள காங்கிரஸ். அயல்நாட்டு வாழ் கேரளாக்காரர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கேரள மக்களை இழிவு படுத்தக் கூடாது. 
 
அயல்நாடுகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்தி அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அனுப்ப வேண்டாம். இது கேரள மக்களின் சுயமரியாதைக்கும், கவுரவத்துக்கும் இழுக்காகும்.
 
மேலும் அயல்நாட்டில் கவுரவத்துடன் வாழும் இந்தியர்களையும் கேரள மக்களையும் இழிவு படுத்தாதீர்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments