Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவர்களுக்கு கொரோனா இலவச சிகிச்சை கிடையாது! – முதல்வர் திடீர் அறிவிப்பு!

இவர்களுக்கு கொரோனா இலவச சிகிச்சை கிடையாது! – முதல்வர் திடீர் அறிவிப்பு!
, புதன், 1 டிசம்பர் 2021 (09:23 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு இலவச கொரோனா சிகிச்சை கிடையாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
webdunia

இந்நிலையில் கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை சொந்த செலவில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்று தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்? – வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!