Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்குத்தப்பாய் எகிறும் கொரோனா! – கேரளாவில் மீண்டும் ஊரடங்கு!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (09:13 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக கொரோனா அறிகுறி தென்பட்ட கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளன.

இதனால் கேரளாவில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றாலும் பொது போக்குவரத்து, வங்கி சேவைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் 5 நபருக்கும் மேல் ஒன்றாக சுற்றக்கூடாது என்றும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே செல்ல கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments