Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதாவுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவல்! செந்தில் பாலாஜி போல் ஆகுமா?

Siva
செவ்வாய், 26 மார்ச் 2024 (15:09 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டே வரும் நிலையில் கவிதாவுக்கும் அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
 
டெல்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் மார்ச் 15ஆம் தேதி தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments