ஹிஜாப் தடை தீர்ப்பு; நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்! – இருவர் கைது!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:24 IST)
கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அனுமதித்து உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் பல போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த கர்நாடக காவல்துறை கொலை மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments