Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: என்ன காரணம்?

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (08:06 IST)
கர்நாடகாவில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: என்ன காரணம்?
கர்நாடக மாநிலத்தில் திடீரென இன்று காலை முதல் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் 
 
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று காலை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை
 
அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களாக தங்களை கருதவேண்டும் என்றும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
அப்போது 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு வாக்களித்தது. ஆனால் அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை அடுத்து இன்று திடீரென கர்நாடக அரசு பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதி உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments