Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலை முன்னிட்டு மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள்...

தேர்தலை முன்னிட்டு மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள்...
, புதன், 31 மார்ச் 2021 (23:08 IST)
விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று தமிழக அரசு தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊரிற்குச் சென்று ஓட்டளிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்புப் பேருந்து வசதிகள் செய்துள்ளது.

எனவே சென்னையில் இருந்து சுமார் 14,215 பேருந்துகள் இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சிரமமின்றி செல்லமுடியும். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை ஒழிக்க வேண்டும் – சீமான்