Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?
, புதன், 29 மார்ச் 2023 (19:11 IST)
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்  என்றும் இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் பேர் பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் பெருவாரியான மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி.....''மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!'' முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்