Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் தர்ணா போராட்டம்

பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் தர்ணா போராட்டம்
, புதன், 29 மார்ச் 2023 (16:56 IST)
கர்நாடக மாநிலத்தில், பாஜக தொண்டர்கள் இன்று பாஜக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், தற்போது, 4% உள்இடஒதுக்கீடு விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்த  நடைபெற்ற  போராட்டம் வன்முறையாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 27 ஆம் தேதி  பாஜக எம்.எல்.ஏ விருபாக்சப்பா  போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மாதல் விருபாக்சப்பா மீது முன்வைத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ்  முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில்,  ஜாமீன் மறுக்கப்பட்ட  நிலையில்,. சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பாவை இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருபாக்சாவின் மகன் லஞ்சம் பெறும்போது கையும் களவுமான லோக்யாத்தா போலீஸார் கைது செய்த நிலையில், விருப்பாக்சப்பாவின் மகன் வீட்டிலிருந்து ரூ. 8 கோடி பணத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த` நிலையில், லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாஷப்பாவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று பாஜக தொண்டர்கள் இன்று பாஜக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாஜக தலைமை தங்கள் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த மா நிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வந்தே பாரத்'' ரயில் மீது கல்வீசித் தாக்கினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!