Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (09:49 IST)
த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். 

 
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.
 
இதன் 22 வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
 
த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். அப்போது இந்திய ராணுவத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேச இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments