Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அமைச்சரின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய பத்திரிகையாளர் கைது

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:44 IST)
டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை சத்தீஸ்கர் காவல்துறையினர், பாஜக அமைச்சரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்துள்ளனர்.


 

 
பத்திரிகையாளர் வினோத் வர்மா பிபிசி இந்தி மற்றும் இந்தி நாளேடான அமர் உஜாலிவிலும் பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநில சமூக பிரச்சனைகள் குறித்து நீண்ட காலமாக எழுதி வந்தார். சத்தீஸ்கர் மாநில பாஜக உறுப்பினர் பிரகாஷ் பஜாஜ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
வினோத் வர்மா, பாஜக அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் அடங்கிய வீடியோ சிடிக்கள் இருப்பதாக கூறி பணம் பறித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் வினோத் வர்மாவை அவரது வீட்டில் கைது செய்தனர்.
 
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல், வினோத் வர்மா எழுதும் செய்திகள் அரசுக்கு ஆத்திரமூட்டியதாகவும், இந்த கைது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். வினோத் வர்மா கைது செய்யப்பட்டதற்கு பல மூத்த பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments