Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அமைச்சரின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய பத்திரிகையாளர் கைது

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:44 IST)
டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை சத்தீஸ்கர் காவல்துறையினர், பாஜக அமைச்சரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்துள்ளனர்.


 

 
பத்திரிகையாளர் வினோத் வர்மா பிபிசி இந்தி மற்றும் இந்தி நாளேடான அமர் உஜாலிவிலும் பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநில சமூக பிரச்சனைகள் குறித்து நீண்ட காலமாக எழுதி வந்தார். சத்தீஸ்கர் மாநில பாஜக உறுப்பினர் பிரகாஷ் பஜாஜ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
வினோத் வர்மா, பாஜக அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் அடங்கிய வீடியோ சிடிக்கள் இருப்பதாக கூறி பணம் பறித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் வினோத் வர்மாவை அவரது வீட்டில் கைது செய்தனர்.
 
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல், வினோத் வர்மா எழுதும் செய்திகள் அரசுக்கு ஆத்திரமூட்டியதாகவும், இந்த கைது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். வினோத் வர்மா கைது செய்யப்பட்டதற்கு பல மூத்த பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments