Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு: ஆளுனர் அதிரடி நடவடிக்கை

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (21:39 IST)
ஜம்மு காஷ்மீர் சட்டசபை சற்றுமுன் திடீரென கலைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க முன்னாள் முதல்வர் மஹபூபா முப்தி அவர்களும், பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க தனித் தனியாக உரிமை கோரியதை அடுத்து சற்றுமுன் திடீரென சட்டசபையைக் கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க மஹபூபா திட்டமிட்டார். அதேபோல் பாஜக சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க போட்டி போட்டதால் இருவரும் ஆட்சி அமைக்க முடியாத வகையில் கவர்னர் சட்டசபையை கலைத்துவிட்டார்

இந்த நிலையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments