Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சந்திரபாபு நாயுடு கழுதை மேய்த்தாரா?”…ஜெகன் மோகனின் சர்ச்சை பேச்சால் நாயுடு வேதனை

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (13:22 IST)
ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “நாயுடு, கழுதை மேய்த்தாரா?” என கேட்ட கேள்வியால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரும் வேதனையில் உள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், நேற்று சட்டசபையில் ஜெகன் மோகன் ரெட்டியிடம், மாநிலத்தில் நிலவும் வரட்சியை பற்றி கேள்வி எழுப்பியதற்கு, அவர் சம்பந்தமில்லாத வேறு விஷயங்களை பேசினார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவது போல், நமது மாநிலத்திலும் அணைகள் கட்டப்பட வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி அரசிடம் வேண்டுகோள் வைத்தபோது , ”சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது கழுதையா மேய்த்துகொண்டிருந்தார்?? என்று அவமானப்படுத்தியதாகவும், இது போல் ஒரு அவலமான நிலையைத் தான் இதுவரை கண்டதில்லை எனவும் பெரும் வேதனையோடு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த மாதம், சந்திரபாபு நாயுடுவின் வீடு, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்கப்பட்டது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் கட்டப்பட்ட அரசு கட்டிடமும், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments