Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Advertiesment
இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு
, வியாழன், 10 டிசம்பர் 2020 (18:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இனி நான்கு முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் பிப்ரவரி மார்ச்ம் ஏப்ரல்ம் மே ஆகிய மாதங்களில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
மேலும் 4 தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர் எடுத்துள்ளாரோ, அந்தத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார் இதனாலேயே ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருக்கும் நளினி கணவர் முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு: விடுதலையே இல்லையா?