Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (20:02 IST)
சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ சற்றுமுன் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான ஒருசில நிமிடங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
 
இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல் என போற்றப்படும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
 
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிமீ தூரத்தில் சந்திரயான் 2 இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாகவும், இந்த புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments