Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திராயன் செயற்கைக்கோள் தயாரா ? – நீண்ட இழுபறிக்குப் பிறகு தகவல் !

சந்திராயன் செயற்கைக்கோள் தயாரா ? – நீண்ட இழுபறிக்குப் பிறகு தகவல் !
, வியாழன், 2 மே 2019 (09:04 IST)
இந்தியா நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செயற்கைக்கோளான சந்திராயன் 2 உருவாக்கி வருகிறது. அந்த செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்பது குறித்து இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.

இந்தியா சார்பில் முதன்முதலாக நிலவைப்பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் 2008 ஆம் ஆண்டும் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மிகக்குறைந்த செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையை சந்திராயன் 1 இந்தியாவிற்குப் பெற்று தந்தது.

இதையடுத்து நிலவில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன் 2 ராக்கெட் தயாரிப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால் சந்திராயன் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்பதில் நீண்ட இழுபறி இருந்தது. இதுகுறித்து இஸ்ரோ இப்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் ‘சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்’ என் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் கேட்ட மூன்று கேள்விகள் – ஒட்டப்பிடாரத்தில் ஸ்டாலின் !