Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45

28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:23 IST)
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, 28 செயற்கைக்கோள்களூடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45 எமிசாட்.

 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 
 
சுமார் 436 கிலோ எடை உள்ள இந்த ராக்கெட், இந்திய ராணுவத்தின் உளவுப்பணி பயன்பாட்டிற்காக செலுத்தப்பட்டுள்ளது. மினி செயற்கைக்கோள் எமிசாட்டும் இதனுடன் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  
webdunia
இந்த ராக்கெட்டில் அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. 
 
இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்த உள்ளது. அதாவது, தரையில் இருந்து 749 கிமீ தொலைவில் எமிசாட்டும், 505 கிமீ தூரத்தில் 28 அயல்நாட்டு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னொரு வாய்ப்பு வேண்டுமா பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க...?