பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸ் வியூகத்தால் 3வது அணி அதிர்ச்சி

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (06:34 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயாவதி மற்றும் அகிலேஷ் கட்சிகள் மட்டும் கூட்டணி வைத்தது. இதனால் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டதால் அக்கட்சி உபியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டது.

ஆனால் பிரியங்கா காந்தி என்ற கடைசி அஸ்திரத்தை காங்கிரஸ் தற்போது பயன்படுத்தியுள்ளதால் உபியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேலும் உபியில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலின்போது சோனியா காந்தியின் 'ரேபேலி' தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், அதுமட்டுமின்றி உபி முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயங்கும் கட்சிகள் கூட பிரியங்கா பிரதமர் வேட்பாளரானால் ஆதரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடியால் நாடு முழுவதும் மோடியா? பிரியங்காவா? என்ற அலை தோன்றும் என எதிர்பார்க்கப்படுவதால் 3வது அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments