Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 வருடங்களை பூர்த்தி செய்த இந்தியாவின் முதல் தனியார் ரயில்.. கட்டணம் அதிகமாக இருந்தாலும் வரவேற்பு..!

Advertiesment
தேஜாஸ் ரயில்

Mahendran

, செவ்வாய், 28 அக்டோபர் 2025 (18:05 IST)
இந்திய ரயில்வேயின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட ரயில் சேவையான 'தேஜாஸ் விரைவு ரயில்', 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC)-யால் இயக்கப்படுகிறது. புது டெல்லிக்கும் லக்னௌவுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில், தற்போது 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
 
சேவையை தொடங்கிய முதல் மாதத்திலேயே ரூ. 7.73 லட்சம் வருவாய் ஈட்டி தேஜாஸ் சாதனை படைத்தது.
 
இந்த ரயிலின் கட்டணம், சதாப்தி மற்றும் வந்தே பாரத் போன்ற பிற ரயில்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புது டெல்லி - லக்னௌ வழித்தடத்தில், தேஜாஸ் ரயிலின் ஏசி இருக்கை வசதிக்கு ரூ. 1,679-ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதிக்கு ரூ. 2,457-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
 
அதிகக் கட்டணம் இருந்தபோதிலும், அதன் தரமான சேவைக்காக தேஜாஸ் ரயில் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!