Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபரிடம் ரூ. 7.42 கோடி மோசடி: ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் அதிரடி கைது..!

Siva
வெள்ளி, 20 ஜூன் 2025 (11:39 IST)
மும்பையில், ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் கணவரான புருஷோத்தம் சவான் என்பவர், சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் சிலரை ரூ. 7.42 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.
 
பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சவானை, ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
 
ஐபிஎஸ் அதிகாரி ரஷ்மி கரந்திகரின் கணவரான சவான், "அரசு ஒதுக்கீட்டின்" கீழ் நிலங்களை குறைந்த விலையில் விற்பதாக பொய் வாக்குறுதி அளித்து, தொழிலதிபரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
 
மகாராஷ்டிரா போலீஸ் அகாடமிக்கு டி-ஷர்ட்கள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை பெறவும் தொழிலதிபருக்கு உதவுவதாக அவர் வாக்குறுதி அளித்ததாகவும் அதிகாரி தெரிவித்தார்.
 
கடந்த மாதம், பொருளாதார குற்றப்பிரிவு சவானை இதேபோன்ற மற்றொரு வழக்கில் கைது செய்தது. மும்பை, தானே மற்றும் புனேவில் உள்ள அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் விற்பதாக வாக்குறுதி அளித்து பலரிடம் ரூ. 24.78 கோடி மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI சாட்போட்டுடன் காதல்.. நிஜ மனைவியின் கோபம்.. இளைஞரின் வாழ்க்கையில் விளையாடிய டிஜிட்டல் காதல்..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. இன்னும் குறையுமா?

லாட்டரியில் விழுந்த ரூ. 2,120 கோடி பரிசு! யாருக்கு விழுந்தது என கண்டிபிடிக்க முடியவில்லையா?

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! - உலக அகதிகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

முதல்வருக்கு பக்தி இல்லை.. அதனால் முருகர் மாநாடு நடத்துகிறோம்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments