Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் வந்தாலே வந்துடுவாங்க..! மீண்டும் ஐபிஎல் சூதாட்டம்! – மத்திய பிரதேசத்தில் கைது!

ஐபிஎல் வந்தாலே வந்துடுவாங்க..! மீண்டும் ஐபிஎல் சூதாட்டம்! – மத்திய பிரதேசத்தில் கைது!
, திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:41 IST)
மத்திய பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்று விடுமுறை நாளானதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன். மதியம் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியும், மாலை மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டிகள் மீது முறைகேடாக சூதாட்டமும் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் இப்படியாக ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து கட்டிடம் ஒன்றில் சோதனை செய்த போலீஸார் 5 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்த ஒகேனக்கல்! – மக்கள் மகிழ்ச்சி!