Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் கைது தடை நீட்டிப்பு

Advertiesment
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் கைது தடை நீட்டிப்பு
, திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:03 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
 
இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியும், அதேபோல் அவரை ஏப்ரல் 16 ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். 
webdunia
அந்த காலக்கெடுவானது இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுகவனேஸ்வரர் கோவில் யானை : கருணைக் கொலை நீதிமன்றம் அனுமதி