Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஃபோசிஸ் எடுத்த அதிர்ச்சியூட்டும் முடிவு..பத்தாயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம்

Arun Prasath
புதன், 6 நவம்பர் 2019 (08:44 IST)
ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

தனது நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், உயர்பதவிகள், மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை  பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் பல நாடுகளில் பல கிளைகளை உடைய நிறுவனம். இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. மேலும் சென்னை, புவனேஷ்வர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட 14 இடங்களில் இதன் கிளை உள்ளது.

இந்நிலையில் 3 மாதங்களில் இந்த நிறுவனத்தை சேர்ந்த பத்தாயிரம் பணியாளர்களின் பணிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக செலவுகளை குறைத்து வருவாயை உயர்த்த அமெரிக்காவின் காக்னிசண்ட் நிறுவனம், 7 ஆயிரம் பணியாளர்களை நீக்க சமீபத்தில் முடிவெடுத்தது. இதே பாணியை பல ஐடி நிறுவனமும் பின்பற்றி வந்த நிலையில் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

கள்ளக்காதலனுடன் வாழ கணவரை கொலை செய்த மனைவி.. சாப்பாட்டில் கலந்த தூக்க மாத்திரை..!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments