Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுவால் கட்டுப்பாடு: டெல்லி மெட்ரோவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (07:20 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக மாசுக்காற்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மாசு பிரச்சனைக்கு தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டும் களத்தில் இறங்கியுள்ளது. மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுக்கு பல கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள நிலையில் டெல்லி அரசும் பொது மக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது 
 
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கடந்த திங்கள் முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒற்றை எண்களில் முடியும் வாகனங்கள் ஒரு தினமும் இரட்டை எண்களின் முடியும் வாகனங்கள் ஒரு தினமும் என மாறி மாறி வாகனங்களை இயக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளை மீறினால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவிப்பு செய்தது
 
இதனையடுத்து டெல்லியில் போக்குவரத்து குறைவதோடு வாகனங்களில் ஏற்படும் புகை போன்ற மாசு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி அரசின் இந்த வாகனம் கட்டுப்பாடு காரணமாக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
 
வாகன கட்டுப்பாட்டிற்கு பின்னர் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மட்டும் டெல்லி மெட்ரோ ரயில்களில் 16 சதவீத பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் டெல்லி மெட்ரோவில் வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments