Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

Siva
புதன், 14 மே 2025 (07:52 IST)
பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, 24 மணிநேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அந்த அதிகாரி, தன்னுடைய பதவிக்குரிய கடமைகளை மீறி, விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தொடர முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டு, உடனடி வெளியேற்றத்துக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது, “புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி, தமக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வேலையை விலக்கி, ஏதேனும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவர் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருதரப்பு மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், அந்த அதிகாரிக்கு எதிரான இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தைக் கூட்டும் என்று கருதப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments