Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 46 ராக்கெட்

Webdunia
புதன், 22 மே 2019 (08:06 IST)
இந்தியாவின் பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் ரேடார் செயற்கைக்கோளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனைய்டுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
பூமியைக் கண்காணிக்க ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு சரியாக திட்டமிட்டபடி ஏவப்பட்டது.
 
இந்த செயற்கைக்கோளின் உதவியால் பகலில் மட்டுமின்றி இரவிலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் இந்த செயற்கைக்கோள் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் வகையில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.
 
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இஸ்ரோ தலைவர் சிவன், பிஎஸ்எல்வி சி-46 மூலம் ரீசாட்-2பி செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக சந்திராயன் -2ஐ  வரும் ஜூலை 9ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விண்கலம் செப்டம்பர் 6ம் தேதி சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments